உள்ளூர் விமான நிறுவனத்தின் இணை நிறுவனர், மனைவி, மகன் ஆகியோர் கைது

உள்ளூர் விமான நிறுவனத்தின் இணை நிறுவனர் அவரது மனைவி மற்றும் மகனுடன் போலீசார் இன்று மாலை கைது செய்துள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக  குற்ற புலனாய்வுத் துறை இயக்குநர் ரம்லி யூசுப் தெரிவித்தார். பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் 2001 இன் கீழ் விசாரணைகளை எளிதாக்குவதற்காக மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

விமான நிறுவனத்தின் பங்குதாரரான 57 வயதானவர், அவரது மனைவி 55, மற்றும் மகன் 26, ஆகியோர் ஷா ஆலமில் உள்ள அவர்களது இல்லத்தில் மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று அவர் கூறினார். 3 பேருக்கான விளக்கமறியல் விண்ணப்பங்களை போலீசார் இன்று சமர்பிப்பார்கள் என்றும் ரம்லி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here