கோலாலம்பூர்: காசாவில் எந்த விதமான வன்முறையையும் முடிவுக்குக் கொண்டுவர விரிவான முயற்சிகள் தேவை என்று மலேசியாவும் பாலஸ்தீனமும் ஒப்புக் கொண்டுள்ளன. பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் காசாவின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக அவர் தொலைபேசியில் உரையாடியபோது இது எட்டப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக வழங்கப்படுவதை அனைத்து தரப்பினரும் உறுதிசெய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அன்வார் தனது X கணக்கில் ஒரு பதிவின் மூலம் கூறினார்.
சியோனிச அரசு பொதுமக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் குறித்து அப்பாஸ் தனக்குத் தெரிவித்ததாகவும், அவ்வாறான நடவடிக்கைகளை இருவரும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் பிரதமர் கூறினார். ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக அன்வார் தற்போது சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ளார்.
இரு பிராந்திய அமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த உச்சிமாநாட்டின் ஆசியான் ஒருங்கிணைப்பாளராக மலேசியா உள்ளது. இந்த உச்சிமாநாடு இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் குறித்தும், சமீபத்திய சியோனிச இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து காசா மக்களின் துன்பங்களுக்கு முடிவுகட்டுவதற்கான வழிகளையும் கண்டறியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









