போபால்,
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். போபால், மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், நவராத்திரியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளும் பா.ஜ.க.வின் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அவர் பேசும்போது, மகள்கள் மற்றும் சகோதரிகளுடன் தவறாக நடந்து கொள்பவர்கள் தப்ப முடியாது என்று கூறினார். தேவைப்பட்டால், அதுபோன்ற சம்பவங்களில் தொடர் புடைய நபர்களின் சொத்துகள் புல்டோசர்களை கொண்டு இடித்து தள்ளப்படும் என்று பேசினார்.