கப்பாளா பத்தாஸில் 24 மணி நேரத்திற்கு முன்பு இறந்துவிட்டதாக நம்பப்படும் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம், இங்கு அருகே உள்ள தாசேக் குளுகோர், போகோக் மச்சாங்கில் உள்ள குளத்தில் மிதந்தது. செபெராங் பிறை உத்தாரா காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் அஸ்ரி ஷாஃபி கூறுகையில், மாலை 6.50 மணியளவில் அந்த பகுதியைக் கடந்து சென்ற ஒரு நபர் மிதந்த உடலைக் கண்டு காவல்துறையைத் தொடர்புகொண்டார்.
உடலைக் கண்டுபிடித்தவர் முதலில் ஒரு பொருள் மிதப்பதைக் கண்டார். ஆனால் உற்று பார்த்தபோது, ஒரு உடல் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடல் பின்னர் பிரேத பரிசோதனைக்காக செபெராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவு நிலுவையில் இருப்பதால் போலீசார் இந்த வழக்கை திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவர்கள் அல்லது யாருடைய குடும்ப உறுப்பினர் காணாமல் போயிருந்தாலும், விசாரணை அதிகாரி ஏஎஸ்பி வின்ஸ்டன் அனாக் ராய்ப்பை 04- 576 2222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.