அலோர்காஜா கல்லூரி விடுதியில் மாணவர்கள் தங்கியிருந்த மேசைக்கு அடியில் மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அலோர் காஜா குடிமைத் தற்காப்புப் படை (APM) நடவடிக்கை, இயற்கைப் பேரிடர் மற்றும் தளவாட அதிகாரி லெப்டெனன் (PA) அப்துல் ஹாடி பஹரோம் கூறுகையில், லெண்டுவில் உள்ள கல்லூரியில் காலை 9 மணிக்கு விரிவுரையில் கலந்துகொள்ளத் தயாராகிக்கொண்டிருந்த ஒரு மாணவரால் ஒரு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.
பாம்பு தாக்கிவிடுமோ என்று பயந்த மாணவர், அவசர அழைப்புக்கு முன் அறையை விட்டு வெளியேறினார். மேசைக்கு அடியில் சுருண்டிருந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (அக். 24) மலைப்பாம்பு காட்டுக்குள் விடப்பட்டது என்றும் அவர் கூறினார்.









