நகைக்கடை பெண் காசாளர் கைது

தான் பணிபுரிந்த கடையில் இருந்து நகைகளை திருடி விற்பனை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். புதன்கிழமை (அக். 25) ஒரு அறிக்கையில், அம்பாங் ஜெயா காவல்துறைத்தலைவர் முகமட் அசாம் இஸ்மாயில், 31 வயதான சந்தேக நபர் செப்டம்பர் முதல்  கொள்ளையடித்து வருவதாகக் கூறினார்.

அம்பாங் ஜெயாவில் உள்ள ஒரு தங்கக் கடையின் மேலாளரான புகார்தாரர், மூன்று ஆண்டுகளாகப் பணிபுரியும் காசாளர்களில் ஒருவர் நகைகளை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கான விலைப்பட்டியலைப் பொய்யாக்குவதைக் கண்டறிந்தார். இழப்பு சுமார் RM12,838 என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

அப்போது, திருடப்பட்ட நகைகளை சந்தேக நபர் விற்பனை செய்துள்ளார். புகார்தாரர் காவல்துறையை தொடர்பு கொண்டதை அடுத்து அக்டோபர் 23 அன்று கைது கடையில் வைத்து கைது செய்தனர். வெள்ளிக்கிழமை (அக் 27) வரை நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here