கெந்திங் ஹைலண்ட்ஸில் 4.6 மில்லியன் ரிங்கிட் சிப்ஸ் திருடப்பட்ட சம்பவம்: 10 பேர் கைது

கெந்திங் ஹைலேண்ட்ஸில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் 4.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சூதாட்ட சிப்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உதவுவதற்காக 10 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியான் மெட்ரோவின் படி, காவல்துறையினரின் தொடர்ச்சியான சோதனைகளைத் தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டதாக பகாங் காவல்துறைத் தலைவர் யஹாயா ஓத்மான் கூறினார்.

மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் மேலும் சோதனைகள் நடத்தப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். நேற்று, கெந்திங் கேசினோவின் பாதுகாப்பு நிர்வாகத்தால் அக்டோபர் 28 அன்று உடைப்பு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, விசாரணையைத் தொடங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்த தகவல் உள்ள பொதுமக்கள், 09-2222222 என்ற எண்ணில் பென்டாங் காவல்துறை தலைமையகத்தை அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here