Ops Samseng Jalanan சோதனை: 1,000 சம்மன்கள் – 2 பேர் கைது

இஸ்கந்தர் புத்ரியில்   Ops Samseng Jalanan போது பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக வாகன ஓட்டிகளுக்கு 1,000 சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன. 18 மற்றும் 20 வயதுடைய இருவர் இந்த நடவடிக்கையில் ஆபத்தான வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இஸ்மாயில் சுல்தான் நெடுஞ்சாலையைச் சுற்றி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்கந்தர் புத்ரி காவல்துறைத் தலைவர் இப்ராஹிம் மாட் சோம் தெரிவித்தார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 64ன் கீழ் 339 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 21 கார்களை பறிமுதல் செய்துள்ளோம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சியில் காவல்துறை தொடர்ந்து ஈடுபடும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here