கோலாலம்பூர்: பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பார்கள் என துணைப் பிரதமர் அகமது ஜாஹிட் ஹமிடி கருத்துரைத்துள்ளார். இதுவரை, நான்கு பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சிகளில் இருந்து கொண்டே அன்வாருக்கு ஆதரவை அறிவித்துள்ளனர்.
ஆனால் அதிகமான (எதிர்க்கட்சி) நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை ஆதரிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று ஜாஹிட் கூறினார். பெரிக்காத்தான் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவை நல்லெண்ணத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.