ஜோகூரியர்கள் கலாச்சாரங்கள், சமயங்களின் பன்முகத்தன்மையை தோழமையுடன் கொண்டாடுகிறார்கள்: டாக்டர் வீ

ஜோகூர் பாருவில் கலாச்சாரம் மற்றும் மதங்களின் பன்முகத்தன்மையை அனைத்து ஜோகூரியர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள், தோழமை மற்றும் நல்லிணக்க உணர்வு நிறைந்ததாக டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறுகிறார்.

ஜோகூர் எம்சிஏ இணைப்புக் குழுத் தலைவரான எம்சிஏ தலைவர், சனிக்கிழமை (நவம்பர் 25) இங்கு நடைபெற்ற மாநில தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் முகநூல் பதிவில் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள என்னை அழைத்த மஇகா இளைஞரணித் தலைவர் கே. ராவன் குமார் நன்றி தெரிவித்து கொள்வதாக ஆயர் ஹித்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த கொண்டாட்ட நிகழ்வை ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாபிஸ் காசி தொடங்கி வைத்தார்.

ஜோகூர் துணை சபாநாயகர் டத்தோ சம்சோல்பாரி ஜமாலி, சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹஸ்னி முகமது, ஜோகூர் எம்சிஏ துணைத் தலைவர் லிங் தியான் சூன், மஇகா துணைத் தலைவர் டத்தோ எம். அசோஜன், எம்சிஏ பொருளாளர் ஜெனரல் டான் துவான் பெங் மற்றும் சுல்தானா ஆகியோர் கலந்துகொண்டனர் என்றும் டாக்டர் வீ கூறினார். ரோகயா அறக்கட்டளை தலைவர் டத்தோ சுகுமாரன் ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here