ஜித்ரா: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல் விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 43 வயதான அந்த நபர் வியாழக்கிழமை (நவம்பர் 30) இரவு 10 மணியளவில் கூலிமில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக கெடா காவல்துறைத் தலைவர் டத்தோ பிசோல் சலே கூறினார். மேலும் மாநிலம் முழுவதும் ஐந்து காவல்துறை புகார்கள் செய்யப்பட்டன.
முதல் அறிக்கை மாலை 5.33 மணிக்கு பாடாங் தெராப்பில் உள்ள கம்போங் தஞ்சோங் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. கோத்தா ஸ்டார், கோலா மூடா, குபாங் பாசு மற்றும் கூலில் ஆகிய இடங்களிலும் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன என்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
கூலிமில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக இருக்கும் சந்தேக நபர் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று பிசோல் கூறினார்.