பாகான் செராயில் வேன்-லோரி மோதிய விபத்து: உடல் கருகி ஒருவர் உயிரிழந்தார்

ஈப்போ: பாகான் செராயில் சனிக்கிழமை (டிச. 9) லோரியும் வேனும் மோதிய பயங்கர விபத்தில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். பாகான் செராய் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலையத் தலைவர் அஹ்மத் நூர் சியாம்சி ஜைனோல்டின் கூறுகையில், வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் KM198.4 இல் இந்த விபத்து நிகழ்ந்தது.

மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். விபத்து 8.24 மணியளவில் அதிவேக நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கி செல்லும் பாதையில் நிகழ்ந்தது. இதில் வேன் தீப்பிடித்து எரிந்தது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here