மலாக்காவில் கோவிட்-19 கட்டுப்பாட்டில் உள்ளது -மந்திரி பெசார்

மலாக்கா:

நாட்டில் கடந்த இரு வாரங்களில் கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ளநிலையில். மலாக்காவில் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், மக்கள் கவலைப்படவோ, பீதியடையவோ தேவையில்லை, ஏனெனில் மாநிலத்தில் கோவிட்-19 தொற்றுநோய் சம்பவங்களின் சமீபத்திய நிலைமையை மாநில சுகாதாரத் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ தெரிவித்துள்ளார்.

“இருப்பினும், இது தொடர்பான எந்தநிலையையும் எதிர்கொள்ள மாநில அரசு எப்போதும் தயாராக உள்ளது, ஏனெனில் நாங்கள் வர இருக்கும் 2024 புத்தாண்டை வரவேற்கவுள்ளதால் கோவிட்-19 தொற்றுநோய் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது , எனவே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமானால், நாங்கள் அவ்வாறு செய்வோம்,” என்று, நேற்றிரவு இங்கு நடைபெற்ற மலாக்கா 2023 மாநில கல்வியாளர் விருந்து விழாவிற்குப் பிறகு ,செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here