கோத்தா பாரு:
நேற்றிரவு முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து மூன்று மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருடத்தில் மட்டும் கிளந்தான் இன்று மூன்றாவது தடவையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
அங்கு பாசீர் மாஸ், ஜெலி மற்றும் தானா மேரா ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
காலை 10.30 மணி நிலவரப்படி சுமார் 1,064 பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள 8 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கிளந்தானில் உள்ள மூன்று ஆறுகள் அவற்றின் அபாய அளவைத் தாண்டியுள்ளன என்று கூறப்படுகிறது.