இந்தோனேசியாவின் சுமத்ராவின் வடமேற்கு கடற்கரையில் சனிக்கிழமை (டிசம்பர் 30) பிற்பகல் 1.19 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் சிமியுலுவில் இருந்து மேற்கே 323 கிமீ தொலைவில் 19 கிலோமீட்டர் (கிமீ) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று அது கூறியது.








