நண்பகல் நிலவரப்படி மூன்று மாநிலங்களிலுள்ள 13 நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,122 பேர் தங்கியுள்ளனர் – நட்மா

கோலாலம்பூர்:

ன்று காலை நாட்டின் மூன்று மாநிலங்களில் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,483 பேரில் இருந்து த்ற்போது 1,122 பேராக குறைந்துள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட அனைவரும் அந்தந்த பகுதிகளிலுள்ள மொத்தம் 12 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக கிளந்தான் உள்ளது. அங்கு மட்டும் இன்று காலை 11 நிவாரண மையங்களில் 1,395 பேர் தங்கியோருந்த நிலையில், இன்று மதியம் 9 நிவாரண மையங்களில் 1,034 பேராக மேலும் குறைந்துள்ளது.

அதேநேரத்தில் பகாங்கில், வெள்ளத்தால் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மாறாமல் 34 ஆக உள்ளது, அவர்கள் அனைவரும் மாரானில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர், அதே சமயம் கேமரன் ஹைலேண்ட்ஸில் நிலச்சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 87 பேர் இன்னும் நிவாரண மையத்தில் தங்கி உள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here