ஈயக்குட்டையில் மூழ்கி மாணவர் மரணம்

டுங்கூன் :
ன்று மதியம் கம்போங் ரந்தாவ் அபாங் அருகே உள்ள ஈயக்குட்டைப் பகுதியில் தேசிய மேல்நிலைப் பள்ளியின் (SMK) மாணவர் ஒருவர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
முஹமட் ஹஸ்ரி எசானி அப்துல்லா (16) என்பவரின் உடல் மாலை 6.10 மணியளவில் நான்கு மீட்டர் ஆழத்தில் மீட்புக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்டது என்று டுங்கூன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், துணை தீயணைப்புத் தலைவர் ஷாஹ்ரிசல் ஷம்சுதின் கூறினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மாலை 5.13 மணியளவில் அவரது தரப்புக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், உடனே 22 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார். 
“பாதிக்கப்பட்டவர் மற்ற நான்கு நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கி இறந்தார் என நம்பப்படுகிறது. 
“நண்பன் நீரில் மூழ்கிவிட்டார் என உணர்ந்த அவரது நண்பர்கள் நான்கு பேரும் மீட்புக் குழுவைத் தொடர்புகொள்வதற்கு முன்பு அருகிலுள்ள கிராம மக்களிடம் உதவி கேட்டனர்,” என்று அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது மற்றும் பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here