நாட்டின் 3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,531 ஆக உயர்வு

கோலாலம்பூர்:

ன்று காலை 6 மணி நிலவரப்படி ஜோகூர், பகாங் மற்றும் சரவாக் ஆகிய மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட மொத்தம் 2,111 குடும்பங்களைச் சேர்ந்த 7,531 பேர் அங்குள்ள 72 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை துறையின் பேரிடர் கட்டளை மைய இணையதளமான https://portalbencana.nadma.gov.my/ms/ தரவுகளின் அடிப்படையில், மிக அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஜோகூரில் மொத்தம் 1,866 குடும்பங்களைச் சேர்ந்த 6,597 பேர் அங்குள்ள 48 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். மேலும் கோத்தா திங்கி (3,111) , ஜோகூர் பாரு (1,844) , குளுவாங் (1.513) , கூலாய் (76), சிகாமாட் (20) மற்றும் பொந்தியான் (13) ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் பகாங்கில் மொத்தம் 896 பேர் அங்குள்ள 23 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் ரொம்பின் (371) , மாரான் (301) மற்றும் பெக்கான் (224) ஆகிய மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

சரவாக்கில், கூச்சிங் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மொத்தம் 12 குடும்பங்களை சேர்ந்த 38 அங்கு இயங்கிவரும் ஒரு நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here