சிரம்பான்:
நெகிரி செம்பிலான் அரசாங்கம் நெற்பயிர்ச்செய்கைக்காக 20 ஹெக்டேர் பரப்பளவைக் கண்டறிந்துள்ளது என்கிறார் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகத்தின் பற்றாக்குறையைத் தொடர்ந்து, மாநிலத்தில் நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது உள்ளது என்று மாநில கிராமப்புற மேம்பாடு, தோட்டம் மற்றும் பொருட்கள் மற்றும் விவசாயம், உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவுக் குழுக்களின் தலைவரான அவர் கூறினார்.
“அரிசிக்கான தேவை அதிகரிப்பால் நாங்கள் எதிர்கொள்ளும் சிறிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வெறுமையான நிலத்திலும் பயிரிடுவது உட்பட உள்கட்டமைப்பு மற்றும் நீர்ப்பாசனத்தை மேம்படுத்துதல, உரமிடுதல் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்காக ட்ரோன்கள் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற பிற முயற்சிகள் குறித்து நான் மாநில நிர்வாகத்திடம் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கிறேன், குறைந்தது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு போதுமான விநியோகத்தை உறுதிப்படுத்த உதவும் ” என்று அவர் கூறினார்.
மாநில அரசு, மத்திய வேளாண் விற்பனை ஆணையம் (ஃபாமா) மூலம், தற்போது அரிசி பற்றாக்குறை உள்ள பகுதிகளில் உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகத்தை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளது என்று, இன்று வியாழக்கிழமை (அக். 12) நடைபெற்ற மாநில சட்டமன்ற அமர்வின் போது, முகமட் ஹனிஃபா அபு பக்கர் (BN -லாபு) கேட்ட கல்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.