கோத்தா கினாபாலு:
பூலாவ் செபாங்கார் கடற்பகுதியில் குண்டு வைத்து மற்றும் ஈட்டி மூலம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (ஜனவரி 10) இரவு 7 மணியளவில் படகின் கேப்டன் மற்றும் ஒரு மீனவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று மலேசிய கடல்சார் அமலாக்க துறையின் சபா மாநில தலைவர் டத்தோ சே எங்கு சுஹைமி கூறினார்.
“அவர்கள் மீன்களை குண்டுவீசியும் ஈட்டியால் குத்தியும் மீன்பிடித்தலில் ஈடுபட்டதாக எங்கள் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர்களிடமிருந்து வெடிமருந்து தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பொருட்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் பிடிபட்டதாக நம்பப்படும் சில மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இரண்டு சந்தேக நபர்களும் மேலதிக நடவடிக்கைக்காக விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று சுஹைமி கூறினார்.
கடலில் வெடிபொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார், ஏனெனில் இது கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் திட்டுகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.