ஈப்போ:
கடந்த செவ்வாய்கிழமை லாஹாட், தாமான் பிஞ்சி மேவாவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், RM45,900 மதிப்புள்ள போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஈப்போ மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (BSJN) செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் சோதனை நடத்தியதாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் யஹாயா ஹாசன் தெரிவித்தார்.
குறித்த நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 922 கிராம் எடையுள்ள எராமின் 5 என்ற போதைப்பொருள் அடங்கிய 18 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், ஏனைய நான்கு வெளிப்படையான பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் 17.20 கிராம் எடையுள்ள மெத்தாம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் கண்ணாடி குழாய்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
“சந்தேக நபரின் சிறுநீர் பரிசோதனையின் அடிப்படையில் மெத்தம்பேட்டமைனுக்கு சாதகமாக இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் குறித்த சந்தேக நபர் கடந்த நவம்பர் மாதம் முதல் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
“விசாரணையின் அடிப்படையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஈப்போவைச் சுற்றியுள்ள உள்ளூர் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக நம்பப்படுகிறது,” என்றும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் அளவு 3,000 க்கும் மேற்பட்ட போதைப்பித்தர்களால் பயன்படுத்தப்படலாம்.
மேலும் அபாயகரமான மருந்துகள் (சொத்து பறிமுதல்) சட்டம் 1988 இன் கீழ் சந்தேக நபரிடம் இருந்து RM139 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்தோடு ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 39A (1) இன் படி சந்தேக நபர் விசாரணைக்காக ஆறு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.