சாந்தி ராஜன்
பத்துகாஜா, ஜன,13-
வசதி குறைந்த மாணவர்களின் கல்வி செலவுகளுக்கு உதவி நல்கி வரும் கோல்டன் பிராதர்ஸ் வட்டம் இம்முறை நடத்த இருக்கும் கோல்ப் போட்டியின் மூலம் கிடைக்க பெரும் ஒருதொகையை இங்குள்ள சுல்தான் யூசுப் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கமுடிவெடுத்துள்ளது.
விளையாட்டு தளவாடங்கள் வாங்க ஒரு குறிப்பிட்ட தொகை அப்பள்ளி நிர்வாகத்திடம்ஒப்படைக்கப்படும் என்ற அமைப்புத் தலைவர் சரவணா ராஜு தெரிவித்தார்.
இன்று கிளாப்கோல்ப், கிந்தாவில் நடைபெறும் போட்டியில் பங்கு கொள்ள ஏறக்குறைய 152 தனிநபர்கள் முன் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர் கோல்ப் விளையாட்டுத் துறையில் இந்திய இளைஞர்களை ஊக்குவிக்க திட்டம் தீட்டப்படும் என்றார் .