நுரையீரல் புற்றுநோய்; ஜமால் யூனோஸ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கோலாலம்பூர்:

சுங்கை பெசார் அம்னோ பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனோஸ் மீண்டும் நுரையீரல் புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல வாரங்களாக நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சனையால் ஜமால் அவதிப்பட்டதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறைப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில், சிலாங்கூர் பாரிசான் நேஷனல் (BN) தகவல் தொடர்புத் தலைவராக இருந்தபோது, ஜமால் நான்காம் நிலை நுரையீரல் புற்றுநோய் தொடர்பான சிகிச்சைக்காக பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

அக்காலகட்டத்தில், அதிக பணிச்சுமை காரணமாக அதாவது இரண்டு நாட்களுக்குள் கிட்டத்தட்ட 20 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஜமாலின் உடல்நிலை செப்டம்பர் 17, 2022 முதல் மோசமடைந்ததாகக் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here