கார் நிறுத்துமிடத்தின் 2ஆவது மாடியில் விழுந்த ஆடவரால் பரபரப்பு

ஷா ஆலம்: கார் நிறுத்துமிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து காரை ஓட்டி விழுந்த நபர் ஒருவர் காயமடைந்தார். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தாரைத் தொடர்பு கொண்டபோது, ​​இந்தச் சம்பவம் செட்டியா ஆலத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் நிகழ்ந்ததாகவும் இரவு 11.30 மணியளவில் திணைக்களத்திற்கு பேரிடர் அழைப்பு வந்தது என்றும் கூறினார்.

சம்பவ இடத்தில் ஒரு கார் கண்டுபிடிக்கப்பட்டது, அது கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் பொதுமக்களால் பாதிக்கப்பட்டவர் காப்பாற்றப்பட்டு கிள்ளான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்  என்று அவர் கூறினார். அந்த நபர் லேசான காயம் அடைந்ததாகவும், அவருக்கு 40 வயது இருக்கும் என்றும் அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here