சிரம்பான்:
தாமான் ஜூஜூரில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 3 வீடுகள் எரிந்து நாசமானது.
காலை 10.17 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தமக்கு அவசர அழைப்பு வந்தது என்று சிரம்பான் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முகமட் இட்ரிஸ் கூறினார்.
“உடனே சிரம்பான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) இரண்டு இயந்திரங்கள் மற்றும் 17 பணியாளர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
“தீயணைப்புத் துறை அந்த இடத்திற்கு வந்தபோது, 18×30 சதுர அடி அளவுள்ள இரண்டு மாடிகள் கொண்ட மூன்று வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
“ஒரு வீட்டில் மேல் பகுதியில் 30 விழுக்காடும், மற்றைய இரண்டு வீடுகள் 80 விழுக்காடும் எரித்துள்ளன”என்றும், சம்பந்தப்பட்ட வீட்டில் வசிப்பவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர் என்றும் அவர் கூறினார்.
மேலும் சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.