ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 791 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

ஜோகூர் பாரு:

ன்று மாலை 4 மணி நிலவரப்படி ஜோகூரின் 5 மாவட்டங்களில் 214 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 791 பேர் இன்னும் அங்குள்ள 9 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி, 326 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,141பேராக இருந்தது.

மாநிலத்தில் வெள்ள நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருவதால், நிவாரண மையங்களில் தங்கியிருந்த மக்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இன்று 4 நிவாரண மையங்கள் மூடப்பட்டன என்று NADMAவின் தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள நாட்டின் பேரிடர் நிலை குறித்த சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பகாங்கில் மாலை 4 மணி நிலவரப்படி,அங்குள்ள 2 மாவட்டங்களில் 61 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 183 பேர் இன்னும் அங்குள்ள 4 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here