நிபோங் தெபால்:
யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியா (USM ) பொறியியல் வளாகத்தில் உள்ள கணினி ஆய்வகத்தில் இன்று (ஜனவரி 14) ஏற்பட்ட தீ விபத்தில் 60 சவிழுக்காடு எரிந்து நாசமானது.
எவ்வாறாயினும், சம்பவத்தின் போது ஆய்வகத்தில் யாரும் இல்லாததால், காயங்கள் அல்லது உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பில் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்திற்கு காலை 10.10 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாகவும், உடனே நிபோங் தெபால் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த உறுப்பினர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறியது.
அங்கு வந்து பார்த்த தீயணைப்பு துறையினர், கணினி ஆய்வகத்தில் தீப்பிடித்து எரிந்ததை கண்டறிந்தனர், இந்த தீ ஆய்வகத்தின் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான பகுதியை அழித்தது. இருப்பினும் காலை 10.41 மணிக்கு தீ மற்ற கட்டிடங்களுக்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது,” என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது.