கூச்சிங்:
சரவாக்கில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்ட 30 பேர் தங்குவதற்கு, பெத்தாங் பிரிவில் உள்ள டேவான் மெல்லேனியா, டேபாக்கில் ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டது.
ஆறு குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 30 பேர் நள்ளிரவு 1.30 மணி முதல் நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டனர் என்று சரவாக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
நேற்றிரவு பெய்த மழையைத் தொடர்ந்து டேபாக் மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், அவர்களில் 11 ஆண்கள் மற்றும் 12 வயது வந்த பெண்கள் மற்றும் நான்கு சிறுவர்கள் மற்றும் மூன்று பெண்கள்” அடங்குவதாகவும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.