போர்ட்டிக்சன்:
இந்தோனேசியாவில் இருந்து மலேசியாவிற்கு PATI யை சட்டவிரோதமாக கொண்டுவருவபவர்கள் என நம்பப்படும் உள்ளூர்காரர் மூவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை (PATI) கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தி வருபவர்கள் துரோகிகளாகக் கருதப்படுவார்கள் என்று மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் கேப்டன் முகமட் கைரி அப்த் அஜீஸ் கூறினார்.
கடல்சார் அமலாக்கப் பிரிவினரின் கண்காணிப்பு அடவடிக்கையிம்போது, நேற்று மதியம் 12 மணியளவில் சிலாங்கூரில் உள்ள கோலா சுங்கை சிப்பாங்கில் இந்த குற்றச் செயல் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.
அவர்களத்ய் மீன்பிடி படகும் கடல்சார் அமலாக்க பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.