’கோலாலம்பூர்: முன்னாள் நிதியமைச்சர் டைய்ம் ஜைனுதீனின் மனைவி நைமா காலித் மீது நாளை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. அவர் மீது மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படும் என்று ஒரு ஆதாரம் எஃப்எம்டியிடம் தெரிவித்தது. ஆனால் எந்த விதியைக் குறிப்பிடவில்லை.
இந்த மாத தொடக்கத்தில், ஊழல் தடுப்பு நிறுவனம், நைமா மற்றும் அவரது மகன்களான அமீர் ஜைனுதீன் மற்றும் அமீன் ஜைனுதீன் ஆகியோரை விசாரணைக்கு அழைத்தது. குடும்பத்திற்குச் சொந்தமான சொத்துகள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக தாய் மற்றும் மகன்கள் அழைக்கப்பட்டதாக எம்ஏசிசி கூறியுள்ளது.