நாளை வரை திரெங்கானுவில் மோசமான கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர்:

திரெங்கானுவில் உள்ள ஆறு பகுதிகளில் நாளை வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று எச்சரித்துள்ளது.

செத்தியூ, கோலா நெருஸ், உலு திரெங்கானு, கோலா திரெங்கானு, மாராங் மற்றும் டுங்கூன் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, தானா மேரா, பச்சோக், மச்சாங் மற்றும் பாசீர் பூத்தே ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கிளந்தானின் சில பகுதிகளுக்கு நாளை வரை கனமழை எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் திரெங்கானுவில், பெசூட் மற்றும் கெமாமன் ஆகியவற்றையும், பகாங்கின் குவாந்தான் மாவட்டத்திலும் இந்த வானிலை நிலவும் எனவும் அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here