ஜோகூர் பாரு:
கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் தாய் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் காயமடைந்தனர்.
கெம்பாஸ் அருகே பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு அருகே, நேற்று (ஜனவரி 24) மாலை 4.28 மணிக்கு நடந்ததாகத் தெரிவித்தார்.
33 வயதான பெண் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் அது 7 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது என்று, கெம்பாஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி வான் நோர் அஃபென்டி வான் யூசோப் கூறினார்.
“ஓட்டுநரைத் தவிர, அவரது பிள்ளைகளான 11 வயது சிறுமி மற்றும் நான்கு மற்றும் ஆறு வயதுடைய இரண்டு சிறுவர்கள் காரில் இருந்தனர் என்றும், அவர்கள் அனைவரும் இவ்விபத்தில் காயமடைந்தனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்ற பிறகு, அவர்களுக்கு சுகாதாரத் துறையின் உறுப்பினர்கள் முதலுதவி அளித்தபின், மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வான் நோர் அஃபெண்டி கூறினார்.