ஜோகூர் பாரு: கம்போங் கங்கர் தெப்ராவ் கிரியில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் மகா மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவிற்கு தயாராகி கொண்டிருந்த 17 பக்தர்கள் நேற்று இரவு, திடீரென வெள்ளத்தில் சிக்கியதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டனர். தெப்ராவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கைகளின் தளபதி கைருல் அசார் அப்துல் அஜிஸ் கூறுகையில், இரவு 10.13 மணியளவில் தங்களுக்கு ஒரு அறிக்கை கிடைத்ததாகவும், சம்பவ இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பியதாகவும் கூறினார்.
பகலில் பெய்த கனமழையால் கோயில் நிர்வாகம் தீயணைப்புத் துறையைத் தொடர்புகொள்வதற்குள் 3 மீட்டர் வரை தண்ணீர் உயர்ந்தது் இந்தப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படும், குறிப்பாக நீடித்த மழையின் போது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
எட்டு ஆண்கள், எட்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் அடங்கிய பக்தர்கள் நள்ளிரவில் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டதாக கைருல் கூறினார். உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.