சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்த பயணிகள் பேருந்தில் தீ!

செர்டாங்:

சிங்கப்பூரில் இருந்து 22 பயணிகளுடன் கோலாலம்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பியுனர்.

இந்த சம்பவம் சுங்கைபீசி டோல் சாவடிக்கு அருகே நேற்று மதியம் 1.48 மணிக்கு நிகழ்ந்தது என்று, சிலாங்கூர் மாநில தீயணைப்புப் படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் கூறினார்.

பேருந்து தீப்பிடித்ததை உணர்ந்த அதன் ஓட்டுநர் பேருந்தை உடனே நிறுத்தி, பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினார்.

சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்ததும், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு அதிகாரிகள், கடுமையான போராட்டத்தின் பின் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் பேருந்து 90 விழுக்காடு நாசமானது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here