ஜார்ஜ்டவுன்:
ஜெலுதோங்கில் உள்ள கோத்தா எமாஸ் அடுக்குமாடி குடியிருப்பின் பிளாக் 90ன் பார்க்கிங் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீயில் 5 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன.
இரவு 9.44 மணியளவில் சம்பவம் தொடர்பில் அழைப்பைப் பெற்றவுடன், ஜாலான் பேராக் தீயணைப்பு நிலையத்தின் (BBP) அதிகாரிகள் மற்றும் இயந்திரம் என்பன உடனடியாக சம்பவ இடத்திற்கு மாற்றப்பட்டது என்று, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) பினாங்கு செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“தீயில் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் 90 விழுக்காடு தீயில் எரிந்து நாசமாயின, மேலும் இரண்டு ஹோண்டா EX5 மற்றும் SYM மோட்டார் சைக்கிள்கள் ஐந்து சதவீதம் எரிந்தன என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.