கோலா நெருஸ்:
கம்போங் செபெராங் தாகிர் அருகே உள்ள தாமான் பெர்மிண்ட் பெர்டானாவில் உள்ள அவரது வீட்டில் மீன் கடை உதவியாளராக பணிபுரிந்த ஒரு ஆடவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
51 வயதுடைய நபரின் சடலம், நேற்றிரவு 7.10 மணியளவில் படுத்திருந்த நிலையில் காணப்பட்டதுடன், அவர் உயிரிழந்து பல நாட்களாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இரவு 7 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக கிடைத்த தகவலின் பெயரில், காவல்துறை உடனடியாக அந்த இடத்திற்குச் சென்றது என்று கோல திரெங்கானு மாவட்ட காவல்துறையின் இடைக்கால தலைவர், கண்காணிப்பாளர் வான் முகமட் ஜாகி வான் இஸ்மாயில் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட ஆடவர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், கடை உதவியாளராக பணிபுரிந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் பாதிக்கப்பட்டவர் எத்தனை நாட்களுக்கு முன்பு இறந்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
மேலும் “சம்பவ இடத்தில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது என்றும் அவர் சொன்னார்.
“இறப்பிற்கான காரணம் மற்றும் இறந்த காலபகுதியை அடையாளம் காண பாதிக்கப்பட்டவரின் உடல் சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ துறைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.