கோத்தா கினாபாலு:
ஜாலான் சண்டாக்கானில் இன்று (மார்ச் 2) பிற்பகல் காரும் லோரியும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
விபத்தில் கமாலுடின் ஜாஃப்ரன்,35, மற்றும் இந்தோனேசியவைச் சேர்ந்த நூருல் ஹிதாயா அப்துல் ரஹீம் ஆகியோர், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குனர் கென்னத் வில்பிரட் கூறினார்.
மேலும் ஐந்து பேர் – காரில் இருந்த மூன்று பேர் மற்றும் லோரியிலிருந்த இருவர் காயம் அடைந்தனர், என்றும், லோரியில் இருந்த இருவர் காயமின்றி தப்பினர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“இன்று மதியம் 12.53 மணிக்கு விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததாகவும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த ஐந்து பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.