கோல க்ராய் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு

கோல க்ராய்:  கம்போங் பாஹி அருகே ஜாலான் கோல க்ராய்-குவா மூசாங்கில் இரண்டு கார் விபத்தில் சிக்கிய மற்றொரு குழந்தை நேற்று மாலை 3.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.  சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு வயது சிறுவன் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. குவா மூசாங்கில் இருந்து கோத்தா பாரு நோக்கிச் சென்ற நிசான் மார்ச் கார் எதிர் பாதையில் சென்று பெரோடுவா மைவி கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கோல க்ராய் மாவட்ட காவல்துறையின் பொறுப்பாளர் டிஎஸ்பி கமருல்ஜமான் ஹருன் தெரிவித்தார்.

Perodua Myvi காரில் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் இருவர் கோல க்ராய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர் என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். நிசான் மார்ச் காரின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும், காரில் பயணித்த ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். முன்னதாக, விபத்தில் உயிரிழந்த மூவரில் ஒரு சிறுமியும் அடையாளம் காணப்பட்டதாக பெர்னாமா தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here