கூச்சிங்:
சரவாக்கில் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (மார்ச் 4) காலை 8 மணி நிலவரப்படி, 351 குடும்பங்களைச் சேர்ந்த 1,361 பேராக குறைந்துள்ளது.
இந்த எண்ணிக்கை நேற்று 392 குடும்பங்களைச் சேர்ந்த 1,497 பேராக பதிவாகியிருந்தது.
சரவாக் பேரிடர் மேலாண்மைக் குழுவின் கூற்றுப்படி, அங்கு இயங்கிவரும் 12 தற்காலிக நிவாரண மையங்களின் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.