ஈப்போ: மஞ்சோங் பந்தாய் ரெமிஸில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் தனது மூத்த சகோதரர் மற்றும் அவரது மனைவியைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் முதியவர் கைது செய்யப்பட்டார்.
செவ்வாய்கிழமை (மார்ச் 5) பிற்பகல் 3.30 மணியளவில், ஆயில் பாம் தோட்டத்தில், 60 வயதுடைய ஆண் மற்றும் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட சண்டை குறித்த புகாரைத் தொடர்ந்து ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மஞ்சோங் OCPD உதவி ஆணையர் முகமது நோர்டின் அப்துல்லா கூறினார். சொத்து தகராறு காரணமாக சண்டை நடந்திருக்கலாம் என ஏசிபி முகமது நோர்டின் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் தலையில் காயங்களுடன் காணப்பட்டன.
நாங்கள் ஒரு அரிவாளைக் கண்டுபிடித்தோம். அது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என்று நாங்கள் நம்புகிறோம். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். குற்றவியல் சட்டம் பிரிவு 302இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று ஏசிபி முகமது தெரிவித்தார். சந்தேக நபர் புதன்கிழமை (மார்ச் 6) ஶ்ரீ மஞ்சோங் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று அவர் கூறினார்.
சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு முன்வருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் அல்லது மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் அஸ்ஸஸருல் கைரி அப் ஹமீத்தை 012-508 7026 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.