தீ விபத்துக்குப் பிறகு மைடின் மஞ்சோய் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டது

ஈப்போ :

நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை மஞ்சோயில் உள்ள மைடின் ஹைப்பர் மார்க்கெட் இன்று முதல் மூடப்படும் என்று மைடின் முகமட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாற்றாக, வாடிக்கையாளர்கள் Mydin Meru Raya அல்லது Mydin Gopeng கிளைகளுக்கு செல்லலாம் என்று, மைடின் மலேசியா இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“சிரமத்திற்கும் மிகவும் வருந்துகிறோம் மற்றும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. விசாரணைகளுக்கு, 1-300-30-8786 என்ற வாடிக்கையாளர் சேவை ஹாட்லைனைத் தொடர்பு கொள்ளவும்” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தீயணைப்புத் துறையின் அனுமதியைப் பெற்ற பிறகு, மைடின் மஞ்சோய் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் என்றும் ஹைப்பர் மார்க்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த ஹைப்பர் மார்க்கெட் நேற்று மாலை 7 மணியளவில் தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here