கல்வி அமைச்சகம் (MOE) சமூக ஊடகங்களில், நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறாத அர்த்தமுள்ள நெறிமுறை உள்ளடக்கத்தை உருவாக்க ஆசிரியர்களை ஊக்குவிக்கிறது. அதன் அமைச்சர், ஃபட்லினா சிடெக் உள்ளடக்கம் கல்வி சார்ந்ததாகவும் குறிப்பாக மாணவர்கள் பாடங்களைக் கற்கவும், கல்வியாளர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவும் என்றார்.
எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும் என்று அவர் இன்று Sekolah Raja Perempuan Taayah அமைச்சின் பேராக் அளவிலான ஜெளலா ரமலான் (Jaulah Ramadan) நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கூறினார். தொடர்பு மற்றும் மல்டிமீடியா உள்ளடக்க மன்றத்தின் (CMCF) தலைவர் ரஃபிக் ரஸாலி அவர்களின் மாணவர்களை சமூக ஊடக உள்ளடக்கமாக மாற்ற வேண்டாம் என்று ஆசிரியர்களை வலியுறுத்தினார். குறிப்பாக அவர்களின் பெற்றோரின் அனுமதியின்றி வெளியிட்ட அறிக்கை குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
ஜௌலா ரமலான் நிகழ்ச்சியில், நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பள்ளிகளில் மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று ஃபட்லினா கூறினார். இந்த திட்டம் அமைச்சகம் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் மாணவர்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தின் சிறப்பினை அறிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார். மேலும் பள்ளிகளின் வசதியை உறுதிப்படுத்த பள்ளிகளுக்குத் தேவையான ஒதுக்கீடுகளையும் அமைச்சகம் கவனிக்கும். ஃபட்லினா மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 150 அஸ்னாஃப் மற்றும் வசதி குறைந்த மாணவர்களுக்கு நன்கொடைகளை வழங்கினார்.