கோலாலம்பூர்:
ஜோகூர் மாநிலத் தேர்தலில் அம்னோ-பாரிசான் நேஷனல் (Umno-BN) கூட்டணி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ள போதிலும், மத்திய அளவில் ஒற்றுமை அரசாங்கத்திற்கான (Unity Government) ஆதரவு தொடர்கிறது என்று ஜோகூர் மாநில அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் ஜனநாயகம் மற்றும் மாநிலங்களின் அரசியல் சூழல் வேறுபட்டிருக்கலாம், ஆனால் அது மத்திய அரசுக்கான ஆதரவைப் பாதிக்காது என்று அவர் கூறினார்.
மேலும், ஜோகூர் மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் பாரிசான் நேஷனல் தலைமையின் முடிவை அவர் முழுமையாக ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜோகூர் மாநிலம் எப்போதுமே அம்னோவின் கோட்டையாக இருந்து வந்துள்ளது என்றும், அடிமட்டத் தொண்டர்களின் விருப்பத்தின் படியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஒ ன் ஹஃபிஸ் காசி, மக்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே 56 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2027) ஏப்ரல் 21-ஆம் தேதியுடன் தானாகவே முடிவடைவதால், ஜூன் 2027-க்குள் அங்கு 16-ஆவது மாநிலத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.





















