கோலாலம்பூர்:
அம்பாங்கின் ஜாலான் பெம்பானில் உள்ள ஒரு வீட்டில் ஆஸ்திரேலியர் ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
நேற்று நள்ளிரவு 12.19 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது என்று, கோலாலம்பூரில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“தகவல் கிடைத்ததும் கெராமாட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து ஒரு இயந்திரத்துடன் மொத்தம் 10 உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
“அவர்கள் அங்கு வந்தபோது, வீட்டின் கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். பின்னர் கதவு திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் 48 வயதுடையவரின் சடலத்தைக் கண்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், உயிரிழந்த ஆஸ்திரேலிய நாட்டவர் அந்த வீட்டில் வசித்து வந்தாகவும் , அவர் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.
“பின்னர் சடலம் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.