இளைஞர்களை போவ்லிங் விளையாட்டில் ஈடுபடுத்துக

பாயான் பாரு,  மார்ச்-

பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்தியர் இளைஞர்களை போவ்லிங் விளையாட்டில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று பினாங்கு நண்பர்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பினாங்கு பத்து உபான் சட்டமன்ற  உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் அறிவுறுத்தினார்.

பினாங்கு புக்கிட் ஜம்புல்,பேரங்காடி போவ்லிங் விளையாட்டு மையத்தில் பினாங்கு நண்பர்கள் இயக்கத்தின் தலைவர் லோகநாதன் ஏற்பாட்டில் போவ்லிங் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.  இளைஞர்கள் இதில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.

18 குழுக்கள் கலந்துகொண்ட போவ்லிங் விளையாட்டில் பினாங்கு புக்கிட் பெண்டேரா குழு முதல் நிலையிலும் பட்டர்வொர்த் குழு இரண்டாம் நிலையிலும் புக்கிட் மெர்தாஜம் ஸ்டோம் ரைடர் குழு மூன்றாவது நிலையில் வாகை சூடினர்.

பினாங்கு பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் போவ்லிங்  விளையாட்டில் கலந்துகொண்டு பாராட்டுத் தெரிவித்ததுடன் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here