முதியவர்களை குறி வைத்து தொடரும் மோசடி: 3 மில்லியனுக்கு அதிகமான தொகையை இழந்த மூதாட்டி

சிரம்பான்: அதிக வருமானம் தரும் போலி முதலீட்டுத் திட்டத்தில் ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும் மூதாட்டி ஒருவருக்கு 3.46 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது. நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர்  அப்துல் மாலிக் ஹாசிம் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்  60  வயதானவர் என்றும் ஜன., 22 அன்று அந்நியச் செலாவணி முதலீட்டுத் திட்டத்தை வழங்கும் அறியப்படாத எண்ணிலிருந்து குறுஞ்செய்தி சேவை (எஸ்எம்எஸ்) பெற்றதாகக் கூறினார்.

இந்த வாய்ப்பை நம்பி, பாதிக்கப்பட்டவர் பின்னர் சந்தேக நபர் கொடுத்த கணக்குகளில் 3.46 மில்லியன் ரிங்கிட் தொகையை 60 பரிவர்த்தனைகளில் செலுத்தினார். முதலீட்டு இணையதளத்தை சரிபார்த்த பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

பாதிக்கப்பட்டவர் நேற்று காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மோசடிக்கு ஆளாகாமல் இருக்க, எந்தவொரு முதலீட்டிலும் அல்லது பணக்காரர்களாகும் திட்டங்களிலும் சேரும் முன், அதிகாரிகள் மற்றும் பேங்க் நெகாரா மலேசியாவை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here