சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி  ஆசிரியர்களுக்கான  கால்பந்து போட்டி

சிலாங்கூர் மாநில இந்திய ஆசிரியர்கள் சங்கமும் அம்மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றமும் இணைந்து தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான சுழற்கிண்ண கால்பந்து போட்டியை நடத்தியது.

ஒன்பது மாவட்டங்களைப் பிரதிநிதித்து ஆசிரியர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்ட நிலையில் பெட்டாலிங் பெர்டானா மாவட்டம் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 100 ஆசிரியர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

அவர்களில் இரண்டாம் நிலையில் கிள்ளான் மாவட்டம், மூன்றாம் நிலையில் உலு சிலாங்கூர், கோம்பாக் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் வெற்றி பெற்றனர்.

ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பாக இருப்பதால் இதுபோன்ற போட்டிகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு எண்ணம் கொண்டிருப்பதாக சிலாங்கூர் மாநில இந்திய ஆசிரியர்கள் சங்கத் தலைவர் ஆர். முருகன் தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக இதனை நடத்துகின்றோம். சிலாங்கூர் மாநில இந்திய ஆசிரியர்கள் சங்கமும் அம்மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றமும் இணைந்து நடத்தியது.

ஆசிரியர்களுக்கு ஒரு போட்டியை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டாவது முறையாக இப்போட்டி நடைபெறுவதாக பொருளுதவி வழங்கிய டத்தோ சுரேஷ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here