பினாங்கின் ஆயிர் ஈத்தாம் ஆணையின் நீர் மட்டத்தை அரசு கண்காணிக்கிறது

கோலாலம்பூர்:

நோன்புப்பெருநாள் காலத்தில் நீர் வழங்கல் பிரச்சனைகளைப் பற்றி பினாங்குவாசிகள் கவலைப்படத் தேவையில்லை என்று மாநில முதலமைச்சர் கூறினார்.

ஆயிர் ஈத்தாம் அணையில் நீரின் அளவை மாநில அரசு கண்காணிப்பதாகவும், அதே நேரத்தில் பினாங்கின் தெலுக் பஹாங் மற்றும் மெங்குவாங் ஆகிய இரண்டு முக்கிய அணைகளிலுள்ள நீரின் மூலம் குடியிருப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்றார் அவர்.

மேலும், சுங்கை மூடா அணையிலிருந்து 85 சதவீத நீர் விநியோகம் பெறப்பட்டு வரும் நிலையில், ஆயிர் ஈத்தாம் அணையில் 30 விழுக்காடு நீர் மட்டுமே நீர் இருப்பதாகவும் அவர் கூறினார்.

“தற்போது மழைக்காலம் என்பதால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், மழையால் அணை நிரம்பலாம் என்று சோவ் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here