செமினி, ஏப்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கோத்தா கினபாலு மலை உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளனர். சாந்தி ராமநாயுடு (வயது 48), நர்வின் முனியாண்டி (வயது 24) ஆகியோர் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளனர்.
இது குறித்து பேசிய அவ்விருவரும் இந்தப் பயணத்திற்கு முன்னதாக உடல்நிலை குறித்து மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டோம். பல்வேறு சவால்களைக் கடந்துதான் இந்த மலை உச்சியை அடைந்தோம் என அவர்கள் கூறினர்.
இந்நிலையில் தென் கிழக்காசியாவின் உயரமான சிகரம் எனக் கருதப்படும் கோத்தா கினபாலு மலை உச்சிக்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன் என நர்வின் கூறினார்.
இவர்களின் இந்த முன்னெடுப்பு குறித்து அவர்களின் குடும்பத்தினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.