கோலாலம்பூர்:
இந்த ஆண்டு இறுதிக்குள் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்த நல்ல செய்தியை அரசாங்கம் அறிவிக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக உயர்த்தப்படாதுள்ள அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான வழிகளை தற்போது அரசாங்கம் பரிசீலித்து வருவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பொதுமக்களிடம், குறிப்பாக அரசு ஊழியர்களிடம் இருந்து புகார்களைக் கேட்டறிந்ததால், இந்த விவகாரம் குறித்து அரசு கவனத்தில் எடுப்பதாக, இன்று UiTM பல்கலைக் கழகத்தில் நடந்த நோன்பு துறக்கும் நிகழ்வின்போது அவர் தனது உரையில் கூறினார்.